தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தாராவியில் 3 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மொத்த கரோனா பாதிப்பு இன்று (சனிக்கிழமை) 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 செப்டம்பர் 2020, 1:20 pm


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மொத்த கரோனா பாதிப்பு இன்று (சனிக்கிழமை) 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

தாராவிப் பகுதியில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,018 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 21-ம் தேதி மொத்த பாதிப்பு 2,500-ஐக் கடந்த நிலையில், சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு இன்று 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

அங்கு 2,585 பேர் ஏற்கெனவே குணமடைந்ததையடுத்து, சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.