ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2 தீவிரவாதிகள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில்  2 தீவிரவாதிகளை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில்  2 தீவிரவாதிகளை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் காவல்துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ரோந்துப் பணியின்போது வெவ்வேறு பகுதிகளில் 2 தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவந்திபோரா மாவட்டத்தில் ஒருவரையும், கரேவ் பகுதியில் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

பின்னர் அவர்களின் உடமையில் இருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com