மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கர்நாடக புதிய தொழிற்கொள்கை: ரூ.30,000 கோடி செல்போன் உற்பத்தி இலக்கு

கர்நாடகத்தில் புதிய தொழிற்கொள்கையால் ரூ.30,000 கோடி மதிப்பிற்கு செல்போன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

News image
கோப்புப்படம்
Updated On :20 செப்டம்பர் 2020, 9:46 am

DIN

கர்நாடகத்தில் புதிய தொழிற்கொள்கையால் ரூ.30,000 கோடி மதிப்பிற்கு செல்போன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் செல்போன் உற்பத்திக்காக புதிய தொழிற்கொள்கை 2020 - 25 என்ற திட்டத்தை கர்நாடக அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவரப்பட்டது.

ஆப்பிள், வின்ஸ்ட்ரான், லாவா உள்ளிட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்தியா செல்போன் மற்றும் மின்னணுப் பொருள்கள் சங்கம் (ஐ.சி.இ.ஏ), ஐந்து ஆண்டுகளுக்கான பாலிசி காலத்தில் வருடாந்திர வருவாயில் 1 சதவீத உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை போன்ற குறிப்பிட்ட கொள்கை போன்ற அரசாங்கத்தின் சலுகைகள் வரவேற்கத்தக்கது. 

இதன்மூலம் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித்துறை வளர்ச்சி அடையும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 1 முதல் 1.5 சதவிகிதம் வரையுள்ள செல்போன் உற்பத்தி இந்த திட்டத்தின்மூலம் 7 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக செல்போன் மற்றும் மின்னணுப் பொருள்கள் சங்க தலைவர் பங்கச் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 2023-ஆம் ஆண்டுக்குள் 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.