டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு

முதற்கட்டமாக நாட்டில் அசாம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் குறிப்பிட்ட சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  

News image
அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு
Updated On :27 ஜனவரி 2024, 5:23 pm

ANI


கரோனா பொதுமுடக்கம் காரணமாக மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட பள்ளிகளின் கதவுகள் மாணவர்களுக்காக திறக்கும் நேரம் நெருங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக நாட்டில் அசாம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் குறிப்பிட்ட சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  

கரோனா பேரிடரால் மாணவ, மாணவிகள் உள்ளூர அச்சம் கொண்டிருந்தாலும் பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வருவதால் உற்சாகமடைந்தனர்.

அசாம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம், ஹரியாணா, உள்ளிட்ட மாநிலங்கள், கரோனா பேரிடரின் தாக்கத்துக்கு ஏற்ப சில விதிமுறைகளுடன், உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

அதன்படி, அசாம் மாநிலத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் சோதனை முறையில் 15 நாள்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த 15 நாள்களும் பள்ளிகள் இயங்கிய பிறகு, அடுத்தக்கட்ட நெறிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக மாணவர்கள் அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் வழக்கமான வகுப்பறைகள் போல் அல்லாமல், இன்று முதல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, பாடத்தில் சந்தேகம் இருக்கும் மாணவ, மாணவிகள் மட்டும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டு செல்ல அந்த மாநில பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுபோலவே, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், இமாச்சல், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வருகை கட்டாயமாக்கப்படாமல், விருப்பம் உடையவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பொறுப்பு பெற்றோருக்கே இருப்பதாக அறிவுறுத்தி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இது குறித்து பெற்றோர் கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.