சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 21,209 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,209 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :23 செப்டம்பர் 2020, 2:33 pm


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,209 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 21,209 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,63,799 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 19,476 பேர் குணமடைந்துள்ளனர், 479 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,56,030 பேர் குணமடைந்துள்ளனர், 33,886 பேர் பலியாகியுள்ளனர். 2,73,477 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 22 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,087 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,625 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இந்த மாத தொடக்கத்திலிருந்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.