ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மும்பையில் கனமழை: உள்ளூர் ரயில்சேவை ரத்து

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :23 செப்டம்பர் 2020, 5:33 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளும் நிரம்பியுள்ளதால், நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே மும்பை நகரில் நேற்றும், (செவ்வாய்க் கிழமை) இன்றும் கனமழை பெய்து வருகிறது. மும்பை நகரில் கடந்த  26 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் 24 மணிநேர கனமழை பெய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 286.4 மி.மீ மழை பெய்துள்ளது.

இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து முழுவதுமாக முடங்கியுள்ளது.
தாதர், மாதுங்கா, கொலாபா, பயந்தர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், தாதர் முதல் மாதுங்கா இடையிலான உள்ளூர் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாதுங்கா முதல் மாஹிம், சர்ச்ச்கேட் முதல் அந்தேரி ஆகிய வழித்தடங்களிலும் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒருசில தொலைதூர விரைவுரயில்சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.