அருணாசலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 289 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அருணாசலில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அருணாசலப்பிரதேச சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 289 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8,133-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,216 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 5,903-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 72.58 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரில் அதிக அளவாக தலைநகரி 173 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு சியாங், பாபும்பரே, பாக்கி கேசாங் ஆகிய பகுதிகளில் தலா 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோரில் பாதுகாப்புப்படையினர் 10 பேரும், அசாம் ரைபில் பிரிவில் 6 பேரும், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் 2 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?

பிரசார களத்தில் சரியான போட்டி! தவெக பிரசார வாகனத்தை தெறிக்க விட்ட திலகபாமா!

காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு
கேரளத்தில் வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாகியும் தரவுகளை வெளியிடாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


