தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

News image

மகாராஷ்டிர நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷின்டே

Updated On :24 செப்டம்பர் 2020, 10:14 am

DIN

மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷின்டேவிற்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, நேற்று கரோனா பரிசோதனை செய்துகொண்டதில் எனக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும் உங்களது ஆசிர்வாதத்தால் எனது உடல்நிலை சீராக உள்ளது. 

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், என்னை சந்தித்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொண்டு மருத்துவர் அறிவுரையின்படி தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் ஏற்கனவே 12 அமைச்சர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் ஏக்நாத் ஷின்டேவும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. இந்த வாரம் நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஷின்டே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.