மும்பையில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது

மும்பையில் மழையின் அளவு குறைந்ததால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பையில் மழையின் அளவு குறைந்ததால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

மும்பையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் கனமழை பெய்து வந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. 

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. சாலைகளிலும், தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியதால் நேற்று (புதன்கிழமை) சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. 

அரசு அலுவலகங்களுக்கும், தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்து அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இதனிடையே நகரின் முக்கிய சாலைகளிலுள்ள நீர் மும்பை மாநகராட்சி சார்பில் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மும்பையில் மழையின் அளவு குறைந்ததால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமையில் மும்பையில் அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com