25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5-ஆகப் பதிவு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று நண்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளது.

News image
ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5-ஆக பதிவு
Updated On :27 ஜனவரி 2024, 5:26 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று நண்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர் பகுதியில் இன்று நண்பகல் 12.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்திற்கு ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.  

சில நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று பதற்றம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.