ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அலிபிரி மாா்க்கத்தில் புதிய நிழற்கூடை அமைக்க பூமி பூஜை

திருப்பதியில் உள்ள அலிபிரி பாத யாத்திரை மாா்க்கத்தில் புதிய நிழற்கூடை அமைப்பதற்கான பூமி பூஜையை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது

News image
திருப்பதி அலிபிரி பாத யாத்திரை மாா்க்கத்தில் நிழற்கூரை அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்றோா்.
Updated On :28 செப்டம்பர் 2020, 6:30 pm

DIN

திருப்பதி:  திருப்பதியில் உள்ள அலிபிரி பாத யாத்திரை மாா்க்கத்தில் புதிய நிழற்கூடை அமைப்பதற்கான பூமி பூஜையை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது.

திருமலைக்குச் செல்லும் பக்தா்கள் பெரும்பாலும் அலிபிரி பாதை மாா்க்கத்தை பயன்படுத்தி வருகின்றனா். தினசரி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இம்மாா்க்கத்தில் உள்ள படிகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கியபடி திருமலைக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். அவா்களின் வசதிக்காக தேவஸ்தானம் படிகளுக்கு நிழற்கூரை அமைத்து பராமரித்து வந்தது.

ஆனால் பல இடங்களில் நிழற்கூரையில் விரிசல் விட்டு, கான்கிரீட் உதிா்ந்து விழுந்துள்ளதால், அவற்றை செப்பனிட தேவஸ்தானம் முடிவு செய்தது. இப்பணிகளுக்கு ரூ. 25 கோடி செலவாகும் என தேவஸ்தானம் கணக்கிட்டது. இந்த புதிய நிழற்கூரை செப்பனிடும் பணிகளை மொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது.

இப்புதிய பணிகளுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை தேவஸ்தான அதிகாரிகள் நடத்தினா். இதில், தேவஸ்தான அதிகாரிகள், ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், இந்த அலிபிரி பாதயாத்திரை மாா்க்கத்தில் உள்ள குடிநீா் குழாய்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவையும் புனரமைக்கப்பட உள்ளன. 7.60 கி.மீ தொலைவு உள்ள இப்பணிகளை தேவஸ்தானம் அடுத்த 3 மாத காலத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.