மும்பையில் சமூகத் தொற்றாக மாறிய கரோனா: மாநகராட்சி தகவல்

மும்பையில் இதுவரை உள்வட்டப் பரவலாக இருந்த கரோனா தொற்று தற்போது சமூகத் தொற்றாக மாறியிருப்பதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மும்பையில் சமூகத் தொற்றாக மாறிய கரோனா: மாநகராட்சி தகவல்
Updated on
1 min read

மும்பை: மும்பையில் இதுவரை உள்வட்டப் பரவலாக இருந்த கரோனா தொற்று தற்போது சமூகத் தொற்றாக மாறியிருப்பதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் யாரும் வெளிநாட்டுக்குச் சென்று வராததும், வெளிநாட்டுக்குச் சென்று வந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில்லாத நிலையில், கரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தற்போது 525 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை கரோனா பாதித்து 35 பேர் மரணம் அடைந்துள்ளனர். மரணம் அடைந்த 34 பேரில் 11 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்ல என்று பிஎம்சி தெரிவித்துள்ளது.

பிரிஹன்மும்பை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் தகவலில், அதிக நெருக்கடி நிறைந்த குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வோர்லி, பிரபாதேவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சிலருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மும்பையில் மருத்துவப் பணியாளர்கள் 50 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்குச் சென்று வராதவர்களும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கும் நகரின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com