குஜராத்தில் கரோனா தொற்றுக்கு 48 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து அங்கு கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 12 மணி நேரத்தில் புதிதாக 55 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் ஆமதாபாத்தைச் சேர்ந்தவர்கள். சூரத்தில் இருவர், தஹோத், ஆனந்த் மற்றும் சோட்டா பகுதியைச் சேர்ந்த தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.
ஆமதாபாத் உள்ளிட்ட குஜராத்தின் சில முக்கிய நகரங்கள் 'ஹாட்ஸ்பாட்கள்' என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குஜராத்தில் கரோனா தொற்றுக்கு 48 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, குஜராத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெயந்தி ரவி மேற்குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.