கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,865 ஆக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை தகவல்

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,865 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,865 ஆக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை தகவல்

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,865 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 5,865 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இதுவரை 169 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 478 ஆக அதிகரித்துள்ளது. 

பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு 1135 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 72 ஆக உள்ளது. தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 738. மூன்றாவதாக தில்லியில் 669 பேரும், நான்காவதாக தெலங்கானாவில் 449 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com