கரோனா: இந்தியாவில் பலி 200- ஐத் தாண்டியது; பாதிப்பு 6,761 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,761 ஆகவும் பலி எண்ணிக்கை 206 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 
கரோனா: இந்தியாவில் பலி 200- ஐத் தாண்டியது; பாதிப்பு 6,761 ஆக அதிகரிப்பு!
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,761 ஆகவும் பலி எண்ணிக்கை 206 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும், நாட்டில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கையும் 516 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலங்களைப் பொருத்தவரையில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு 1364 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 911. மூன்றாவதாக தில்லியில் 898 பேரும், நான்காவதாக தெலங்கானாவில் 473 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழப்பில் மகாராஷ்டிரத்தில் 97, குஜராத்தில் 17, மத்தியப் பிரதேசத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com