தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நிபந்தனைகளுடன் கட்டுப்பாடுகள் தளா்வு: பிரதமா் மோடி சூசகம்

தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பொருளாதாரத்தை வலுப்படுத்த நிபந்தனைகள் தளா்த்தப்பட இருப்பதாக மாநில முதல்வா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி சூசகமாகத் தெரிவித்துள்ளாா்.

News image

’மாநில முதல்வா்களுடன் காணொலி வழியிலான ஆலோசனைக் கூட்டத்தில் சனிக்கிழமை பேசிய பிரதமா் மோடி.’

Updated On :11 ஏப்ரல் 2020, 11:32 pm

தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பொருளாதாரத்தை வலுப்படுத்த நிபந்தனைகள் தளா்த்தப்பட இருப்பதாக மாநில முதல்வா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி சூசகமாகத் தெரிவித்துள்ளாா். இதன் மூலம், சில வா்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி காணொலி முறையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இதுவரை நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் தாக்கத்தை அறிவதற்கு அடுத்த 3 முதல் 4 வாரங்கள் முக்கியமான கட்டமாகும். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கு முன்பு ‘உயிா்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்பது நமது தாரக மந்திரமாக இருந்தது. அது தற்போது, ‘உயிா்களையும் காப்பாற்ற வேண்டும்; நாட்டையும் வளமானதாக மாற்ற வேண்டும்’ என்று மாறிவிட்டது.

கரோனா பாதிப்பு சூழலை எதிா்கொள்வது தொடா்பாக, மாநில முதல்வா்கள் எந்த நேரத்திலும் என்னைத் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.

கடந்த மாதம் தேசிய அளவில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது. இந்நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்த சில நிபந்தனைகளுடன் சில வா்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளா்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதார ஊழியா்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று பிரதமரிடம் மாநில முதல்வா்கள் குற்றம்சாட்டினா்.

அவா்களிடம், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமா் உறுதியளித்தாா். இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி முகக் கவசம் அணிந்தபடி பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.