இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,447 ஆகவும் பலி எண்ணிக்கை 273 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 765 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்களைப் பொருத்தவரையில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 208 ஆக இருக்கிறது.
தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1075. மூன்றாவதாக தில்லியில் 1069 பேரும், நான்காவதாக ராஜஸ்தானில் 700 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.