தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா: தில்லியில் 24 மணி நேரத்தில் 5 பேர் பலி, 85 பேருக்கு தொற்று உறுதி

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 5 பேர் பலியாகியிருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2020, 4:15 pm


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 5 பேர் பலியாகியிருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர். 85 பேரில் 26 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர். 

இதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,154 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 746.

மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 1,102 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 6 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளனர். 20 பேருக்கு ஆக்ஸிஜன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 14,036 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 984 மாதிரிகளின் முடிவுகள் வரவில்லை. 11,748 மாதிரிகளுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.