மும்பையில் டைம்ஸ் நெட்வொர்க்கின் ஆறு ஊழியர்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'மும்பை மிரர் நவ்' நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பி.சி.ஆர் வேன் ஆபரேட்டர், இரண்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த மூன்று பேர் என 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதனால் கரோனா பாதிக்கப்பட்ட 6 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் பணியாற்றிய ஊழியர்களும் மும்பை தாஜ் ஹோட்டலில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மும்பையில் உள்ள டைம்ஸ் நெட்ஒர்க் அலுவலகமும் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.