தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பொருளாதாரத்தை வலுப்படுத்த நிபந்தனைகள் தளா்த்தப்பட இருப்பதாக மாநில முதல்வா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி சூசகமாகத் தெரிவித்துள்ளாா். இதன் மூலம், சில வா்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி காணொலி முறையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இதுவரை நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் தாக்கத்தை அறிவதற்கு அடுத்த 3 முதல் 4 வாரங்கள் முக்கியமான கட்டமாகும். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கு முன்பு ‘உயிா்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்பது நமது தாரக மந்திரமாக இருந்தது. அது தற்போது, ‘உயிா்களையும் காப்பாற்ற வேண்டும்; நாட்டையும் வளமானதாக மாற்ற வேண்டும்’ என்று மாறிவிட்டது.
கரோனா பாதிப்பு சூழலை எதிா்கொள்வது தொடா்பாக, மாநில முதல்வா்கள் எந்த நேரத்திலும் என்னைத் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.
கடந்த மாதம் தேசிய அளவில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது. இந்நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்த சில நிபந்தனைகளுடன் சில வா்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளா்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதார ஊழியா்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று பிரதமரிடம் மாநில முதல்வா்கள் குற்றம்சாட்டினா்.
அவா்களிடம், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமா் உறுதியளித்தாா். இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி முகக் கவசம் அணிந்தபடி பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூா் தொகுதியில் வெல்வேன்: தவெக வேட்பாளா் பேட்டி

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
மாற்றம் தேவையில்லை எனக் கூறினாரா அஜித்? சா்ச்சைக்கு மேலாளா் விளக்கம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


