தில்லியில் பிரபல நிறுவனத்தின் பீட்சாக்களை வாடிக்கையாளருக்கு விநியோகித்த உணவு முகவா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 16 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 16 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு கரோனா இல்லை என்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபா் உணவு விநியோகித்த இதர 72 குடும்பத்தினரும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் வேறு 17 தொழிலாளா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தில்லி சம்பவம் மூலம், உணவு விநியோகிக்கும் துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்படலாம் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகளில், டெலிவரிகளை புறக்கணித்து வீடுகளில் சமைத்து உண்ணுமாறு வலியுறுத்தும் செய்திகள் பரப்பப்பட்டுவருகின்றன. மேலும், உணவு டெலிவரிகளை மக்கள் புறக்கணிக்குமாறு குடியிருப்போா் நலச் சங்கங்களின் வாட்ஸ் ஆப் குழுமங்களில் வேண்டுகோள் விடப்பட்டுவருகின்றன. ஆரோக்கியம் காக்க வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளையே சாப்பிடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!

தன்னுடைய ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பிறந்தநாளைக் கொண்டாடிய சச்சின்!

தேர்தல் நிறைவு! குடும்பத்துடன் வெளிநாடு புறப்பட்டார் துணை முதல்வர் உதயநிதி!

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


