மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read


புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

புணேவைச் சேர்ந்த 25 வயதான கர்ப்பிணி, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 16ம் தேதி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. குழந்தைக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கையாக குழந்தை தாயிடம் இருந்து பிரித்து தனி வார்டில் வைக்கப்பட்டிருப்பதாக புணேவின் சசூன் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com