தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தெலங்கானா - சட்டீஸ்கர்.. 100 கி.மீ., தொடர்ந்து 3 நாள்கள் நடந்தே வந்த சிறுமி மரணம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக தெலங்கானாவில் இருந்து சட்டீஸ்கர் நோக்கி தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார்.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 10:06 am


ஊரடங்கு உத்தரவு காரணமாக தெலங்கானாவில் இருந்து சட்டீஸ்கர் நோக்கி தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார்.

ஜமாலோ மட்கம் என்ற 12 வயது சிறுமி தொடர்ந்து 100 கி.மீ.க்கு மேல் வெயிலில் நடந்து வந்ததால் உடலில் தண்ணீர் உள்ளிட்ட சக்துகளை இழந்து மரணம் அடைந்ததாக பிஜப்பூர் முதன்மை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், சிறுமியின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டீஸ்கரைச் சேர்ந்த இந்த சிறுமி உட்பட 11 பேர் கொண்ட குழு, மிளகாய் தோட்டத்தில் வேலை செய்ய தெலங்கானாவுக்கு வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 15ம் தேதி தெலங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு இவர்கள் புறப்பட்டனர்.  போக்குவரத்து வசதி இல்லாததால் தொடர்ந்து 3 நாட்களாக இவர்கள் நடந்தே வந்துள்ளனர். இந்த நிலையில், தான் அந்த சிறுமி சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ளார் என்று மருத்துவர் புஜாரி தெரிவித்துள்ளார்.

போதிய உணவு கிடைக்காமல், நீர்ச்சத்து குறைந்து சிறுமி மரணம் அடைந்திருக்கக் கூடும் என்று கருதுவதாகவும் அவர் கூறினார். சிறுமியின் உடல் பத்திரப்படுத்தப்பட்டு, விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே சிறுமி ஜமாலோவின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அளிப்பதாக சட்டீஸ்கர் முதல்வர் அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.