தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இளநீர் பறிப்பவரின் மனித நேயம்: சொற்ப வருவாயில் காவலர்களுக்கு உதவி வருகிறார்

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஓய்வின்றி உழைத்து வரும் மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள்.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 6:13 am


ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஓய்வின்றி உழைத்து வரும் மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள்.

சிலர், அதையும் தாண்டி தங்களால் இயன்ற உதவியை அவர்களுக்கு நேரடியாகச் செய்தும் வருகிறார்கள்.

உதவி செய்ய வசதி வாய்ப்பு முக்கியமல்ல, மனித நேயம்தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார் கேரளத்தைச் சேர்ந்த கிரீஷ். காலவூரைச் சேர்ந்த கிரீஷ், தென்னை மரங்களில் ஏறி இளநீர் பறிக்கும் வேலையைச் செய்து வருகிறார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, பல்வேறு இடங்களில் உணவு, தண்ணீர் இன்றி பணியாற்றி வரும் காவலர்களைத் தேடிச் சென்று தன்னால் இயன்றதை அளித்து வருகிறார் இவர்.

Story image

ஊரடங்கு தொடங்கியது முதல், என்னால் இயன்றதைச் செய்து வருகிறேன். இப்போது வருவாய் குறைந்து விட்டதால், வெறும் வாழைப்பழம் மற்றும் சோடா பாட்டில் வாங்கி, பணியில் இருக்கும் காவலர்களைத் தேடிச் சென்று வழங்குகிறேன். நமக்காகப் பணியாற்றும் காவலர்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அவ்வளவுதான் என்கிறார் எளிமையாக.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.