போபாலில் 34 காவலர்களுக்கும்; 30 குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா பாதிப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உயர் அதிகாரிகள் உட்பட 34 காவல்துறையினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போபாலில் 34 காவலர்களுக்கும்; 30 குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா பாதிப்பு
Updated on
1 min read


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உயர் அதிகாரிகள் உட்பட 34 காவல்துறையினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சைபர் செல் பிரிவில் பணியாற்றும் காவலருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட 34 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக போபால் காவல்துறை கூடுதல் இயக்குநர் உபேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், இந்த காவலர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 30 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காவலர்களின் குடும்ப பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தற்போது பணியில் இருக்கும் 2,100 காவலர்கள், பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர்.  இவர்கள் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com