மருத்துவமனைக்கு பணிக்கு வரும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும், வளாகத்துக்குள் நுழையும் முன்பே செல்லிடப்பேசிகளைக் கொடுத்துவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும் என்று மேற்கு வங்க முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தொற்று செல்லிடப்பேசிகள் மூலமாகவும் பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவுறுத்தல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், மருத்துவமனைக்குச் செல்லும் அனைத்து மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும், நோயாளிகளும் மருத்துவமனை வளாகத்துக்குள் செல்லும் போதே தங்களது செல்லிடப்பேசிகளை கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும்.
மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் போது தங்களது செல்போன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மேற்கு வங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவமனை பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கு வங்க அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வாக்கு சதவீதம்! தென் மாவட்டங்களில் குறைவு; கொங்கு மண்டலங்களில் அதிகம்!

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


