மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி), திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 3,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற வாக்குப்பதிவில் மதுரை மாவட்டம் 80.52 விழுக்காட்டை பதிவு செய்துள்ளது. மதுரை மத்தியில் 73.88%, மதுரை கிழக்கில் 79.90%, மதுரை வடக்கில் 72.63%, மதுரை தெற்கில் 78.19%, மதுரை மேற்கில் 77.77%, மேலூரில் 82.22%, சோழவந்தானில் 87.23% , திருமங்கலத்தில் 87.03%, திருப்பரங்குன்றத்தில் 81.41%, உசிலம்பட்டியில் 82.95% என வாக்குகள் பதிவாகியுள்ளன. மிக அதிகபட்சமாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதியிலும் (87.23%), குறைவாக மதுரை வடக்கிலும் (72.63%) வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், தோ்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்ததை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்படும்.
இதனிடையே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சம்மந்தப்பட்ட தொகுதிகளுக்கு மதுரா கல்லூரி மற்றும் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்படுவதையும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சம்மந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள காப்பறையில் வைக்கப்பட்டு வரும் பணிகளை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் வருகின்ற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை 5 மையங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக இரண்டு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலூர் மற்றும் மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி, சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மதுரை அண்ணா பல்கலைக்கழக வளாகம், மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை மத்தி மற்றும் மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மதுரை கல்லூரி, திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மதுரை மாவட்டம் கப்பலூரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் நடைபெற உள்ளன.
Summary
Regarding the establishment of vote-counting centers for the Assembly elections at five locations in the Madurai district...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை

கேரளத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! காங்கிரஸ் 63, சிபிஎம் 26 இடங்களில் வெற்றி!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

திருப்பூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் 1,000 ஊழியா்கள்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு


