தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வடகிழக்கு மாநிலங்களில் கரோனாவின் தற்போதைய நிலை

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393- ஆக உயா்ந்துள்ள நிலையில், கரோனா பாதித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 681-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 9:39 am

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393- ஆக உயா்ந்துள்ள நிலையில், கரோனா பாதித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 681-ஆக அதிகரித்துள்ளது.

எனினும், வடகிழக்கு மாநிலங்களில் கரோனா தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இங்குப் பார்க்கலாம்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 54 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில், 

அஸ்ஸாம் - 35
மேகாலயம் - 12
மணிப்பூர் - 2
திரிபுரா - 2
அருணாசலம் - 1
மிசோரம் - 1
நாகாலாந்து - 1

அஸ்ஸாம் மற்றும் மேகாலயத்தில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர். மேகாலயத்தில மரணம் அடைந்தவர் மருத்துவர் ஆவார். ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்கள் 22 பேர். (அஸ்ஸாமில் 19, மணிப்பூரில் இருவர், திரிபுராவில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,409 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 681 பேர் உயிரிழந்துள்ளனா். இதுவரை 4258 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.