கடந்த 7 நாள்களில் 80 மாவட்டங்களில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று பல்வேறு மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார் .
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாட்டில் 80 மாவட்டங்களில் கடந்த 7 நாள்களில் கரோனா வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. அதேபோன்று கடந்த 14 நாள்களில் 47 மாவட்டங்களில், கடந்த 21 நாள்களில் 39 மாவட்டங்களில் ஒருவர் கூட கரோனாவால் பாதிக்கப்படவில்லை. அதேபோன்று கடந்த 28 நாள்களில் 17 மாவட்டங்களில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும், தற்போது 129 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 16 மாவட்டங்களில் இருந்து கரோனாவால் ஒருவருக்குக் கூட பாதிப்பு ஏற்படவில்லை.
அதே நேரத்தில் இந்தியாவில் கரோனா பாதிப்பு 29,435 ஆக உயர்ந்துள்ளன, இதில் 21,632 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,869 பேர் குணப்படுத்தப்பட்டுள்னர். 934 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: சாம்பியன் ஆனது வங்கதேசம்!

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


