

தில்லியில் இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் 529 பேரில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் தில்லியில் 3,314 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 1,078 பேர் குணமடைந்துள்ளனர். முன்னதாக, நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஊடகவியலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, தில்லியில் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
அதன்படி, பரிசோதனை செய்யப்பட்ட 529 பேரில் 3 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அவர்கள் மூவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பணி மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.