டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அயோத்தி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது: உமா பாரதி

அயோத்தி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளதாக பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். 

News image
உமா பாரதி
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

DIN

அயோத்தி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளதாக பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். 

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி அயோத்தி சென்றுள்ளார். 

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையை அடுத்து அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேநேரத்தில் கரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி, அயோத்தி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது. இனி இந்தியா தலையை உயர்த்தி, இங்கு எந்தவிதமான பாகுபாடும் இல்லை என்று பெருமையுடன் உலகிற்கு எடுத்துச் சொல்ல முடியும். ராமர் மீதுள்ள நம்பிக்கையால்தான் நான் இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, ராமர் கோயில் அறக்கட்டளையில் இருந்து அழைப்பு வந்த நிலையிலும், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்தபிறகே தான் செல்வதாக உமா பாரதி கூறியிருந்தார். கரோனா தொற்றுப் பரவல் காரணமாகவே தான் இந்த நிகழ்ச்சியை தவிர்த்திருப்பதாகவும் கூறினார். 

பிரதமர் மோடியுடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோரும் ராம ஜென்ம பூமி இடத்துக்கு சென்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.