பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பள்ளிப் பேருந்து விபத்தில் 6 குழந்தைகள் காயமடைந்தனர்

தில்லியிலுள்ள நாராயணா பகுதியில் கிளஸ்டர் பஸ் மீது வியாழக்கிழமை பள்ளி பேருந்து மோதியதில் 6 மாணவர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜனவரி 2020, 5:01 am

தில்லியிலுள்ள நாராயணா பகுதியில் கிளஸ்டர் பஸ் மீது வியாழக்கிழமை பள்ளி பேருந்து மோதியதில் 6 மாணவர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தில்லி தீயணைப்பு சேவை (டி.எஃப்.எஸ்) அளித்த தகவலின்படி, வியாழக்கிழமை காலை 7.10 மணிக்கு இந்த விபத்து தொடர்பாக அழைப்பு வந்தது. 

காயமடைந்த மாணவர்கள் பொதுமக்களின் உதவியுடன் கபூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இது குறித்து டிஎஃப்எஸ் தலைவர் அதுல் கார்க் கூறியது,  "தீயணைப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள நாராயணா பகுதியில் ஒரு பள்ளி பஸ்ஸும் கிளஸ்டர் பஸ்ஸஸும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலையத்துக்கு அழைப்பு வந்தது. சுமார் ஆறு பள்ளி குழந்தைகள் காயமடைந்துள்ளனர். மேலும் விவரங்கள் பிறகு தெரிவிக்கப்படும்" என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.