இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெங்களூருவில் உயரும் கரோனா பலி: இடுகாடுகளில் நீண்ட வரிசையில் நிற்கும் ஆம்புலன்ஸ்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மயானங்களில் உடல்களை எரிக்க வரும் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது.

News image
பெங்களூருவில் உயரும் கரோனா பலி: இடுகாடுகளில் நீண்ட வரிசையில் நிற்கும் ஆம்புலன்ஸ்
Updated On :20 ஜூலை 2020, 10:38 am

DIN

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மயானங்களில் உடல்களை எரிக்க வரும் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது.

கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைவோரின் உடல்களையும், வேறு உடல்நலப் பிரச்னைகள் காரணமாக மரணமடைவோரின் உடல்களையும் எரிக்க மயானங்களுக்கு வரும் ஆம்புலன்ஸ்கள், தங்கள் முறை வருவதற்காக சாலையோரங்களில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன.

கரோனா நோயாளியின் உடலை மயானத்துக்குக் கொண்டு வந்து நல்லடக்கம் செய்யும் வரை, வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் உடல்களை தகனம் செய்ய அதிக நேரம் ஆவதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ ஊழியர்கள் இன்றியும் தனியார் மருத்துவமனைகள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இந்த பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், பெங்களூருவில் கரோனா பாதிப்பு தீவிரமடையும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.