தாராவியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 9 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவலை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,540 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 98 பேர் மட்டும் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக தாராவியில் நாள்தோறும் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம் 238 நாள்களாக மேம்பட்டுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா பாதிப்பு அதிகரிக்கும் விகிதம் 0.37 சதவிகிதமாக உள்ளது.
ஒரு கட்டத்தில் தாராவி ஹாட்ஸ்பாட் பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.