ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,051 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகளை அந்த மாநில கட்டுப்பாட்டு அறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 6,051 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,02,349 ஆக உயர்ந்துள்ளது. இதில் 49,558 பேர் குணமடைந்துள்ளனர். 1,090 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 51,701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திரத்தில் அதிகபட்சமாக கிழக்கு கோதாவரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,210 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,696 ஆக உயர்ந்துள்ளது.