மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மேற்கு வங்கத்தில் ஆக. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம்

மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம் இருக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

News image
மம்தா பானர்ஜி
Updated On :28 ஜூலை 2020, 12:15 pm

DIN

மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம் இருக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மேற்கு வங்கத்தில் வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் வாரத்தில் இரு நாள்கள் மட்டும் முழு பொதுமுடக்கம் என்ற தற்போதைய நடைமுறை தொடரும் எனவும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மேலும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று பொதுமுடக்கம் இருக்காது என்று கூறிய அவர், 'பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை திறக்கப்படாது. சூழ்நிலையைப் பொறுத்து செப்டம்பர் 5 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்படும்' என்றார். 

அறிவிப்பின்படி, மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 2, 5, 8, 9, 16, 17, 22, 23, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழு பொது முடக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாள்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் அமலில் இருக்கும். 

மேலும், அத்தியாவசியத் தேவைகள் தவிர, மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் இயங்காது. அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கான தடை தொடரும். உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும். நீதிமன்றம் செயல்படும். விவசாயம் சார்ந்த பணிகள், மாநிலம்/ மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லுதல், ஆன்லைன் உணவு டெலிவரி ஆகியவைகளுக்கு வழக்கம்போல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.