திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

'அதிக இறப்பு விகிதம், குஜராத் மாதிரியை வெளிப்படுத்துகிறது' - ராகுல் காந்தி ட்வீட்

நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில்தான் அதிக பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

News image
Updated On :16 ஜூன் 2020, 12:47 pm IST

நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் அதிக பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது குஜராத் மாதிரியை வெளிப்படுத்துவதாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்மறையாக அம்மாநில அரசை குற்றஞ்சாட்டியுள்ளார். 

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பதிவான இறப்பு விகித புள்ளி விவரத்தை வெளியிட்டு அதில் குஜராத் மாநிலத்தில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்று கூறிய அவர், இது 'குஜராத் மாதிரியை வெளிப்படுத்துகிறது' என்று கூறியுள்ளார். 

அதில், குஜராத்- 6.25%, மகாராஷ்டிரா- 3.73%, ராஜஸ்தான்- 2.32%, பஞ்சாப்- 2.17%, புதுச்சேரி- 1.98%, ஜார்க்கண்ட்- 0.5%, சத்தீஸ்கர்- 0.35% என்ற மாநில இறப்பு விகிதங்களை குறிப்பிட்டுள்ளார். 

குஜராத்தில் காரோண பாதிப்பு குறைவாக இருந்த நிலையிலும், பலி எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. 

குஜராத்தில் இதுவரை 24,055 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 1,505 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 16,664 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5,885 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.