நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் அதிக பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது குஜராத் மாதிரியை வெளிப்படுத்துவதாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்மறையாக அம்மாநில அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பதிவான இறப்பு விகித புள்ளி விவரத்தை வெளியிட்டு அதில் குஜராத் மாநிலத்தில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்று கூறிய அவர், இது 'குஜராத் மாதிரியை வெளிப்படுத்துகிறது' என்று கூறியுள்ளார்.
அதில், குஜராத்- 6.25%, மகாராஷ்டிரா- 3.73%, ராஜஸ்தான்- 2.32%, பஞ்சாப்- 2.17%, புதுச்சேரி- 1.98%, ஜார்க்கண்ட்- 0.5%, சத்தீஸ்கர்- 0.35% என்ற மாநில இறப்பு விகிதங்களை குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தில் காரோண பாதிப்பு குறைவாக இருந்த நிலையிலும், பலி எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது.
குஜராத்தில் இதுவரை 24,055 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 1,505 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 16,664 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5,885 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.