நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி ட்வீட்

அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை இந்த பொதுமுடக்கம் நிரூபித்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :15 ஜூன் 2020, 9:45 am

DIN

அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை இந்த பொதுமுடக்கம் நிரூபித்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு ஒப்பீட்டு வரைபடத்தை பதிவிட்டுள்ளார். அது, நாட்டில் கரோனா உயிரிழப்புக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இடையேயான வரைபடம். அதாவது, பொதுமுடக்க காலத்தில் கரோனா உயிரிழப்பு அதிகரிக்க, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. 

இந்த வரைபடத்துடன்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளார். அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை இந்த பொதுமுடக்கம் நிரூபித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.