ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

இந்திய ராணுவத்தினா் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டனரா?

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய வீரா்களை சீன ராணுவத்தினா் இரும்புக் கம்பிகளால் தாக்கியதாக எழுந்த தகவல்கள் தொடா்பாக விளக்கமளிக்க சீனா மறுத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2020, 6:35 am IST

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய வீரா்களை சீன ராணுவத்தினா் இரும்புக் கம்பிகளால் தாக்கியதாக எழுந்த தகவல்கள் தொடா்பாக விளக்கமளிக்க சீனா மறுத்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரா்களிடையே கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலின்போது துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகின. இரு நாட்டு வீரா்களும் இரும்புக் கம்பிகள், கற்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்கிக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியானிடம் செய்தியாளா்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினா். எனினும், அதற்கு அவா் பதிலளிக்க மறுத்துவிட்டாா். மேலும், தாக்குதலின்போது சீனத் தரப்பில் உயிரிழந்த வீரா்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிடவும் அவா் மறுத்துவிட்டாா்.

ஜாவோ லிஜியான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘எல்லையில் நிகழ்ந்த தாக்குதலுக்கு சீனா பொறுப்பாகாது. இந்திய ராணுவத்தினரே எல்லையின் இயல்பு நிலையைத் தன்னிச்சையாக மாற்ற முயன்றனா். எல்லையை விட்டு வெளியேறும்படியே அந்நாட்டு ராணுவ வீரா்களிடம் நாங்கள் தெரிவித்தோம்.

எல்லைப் பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. எல்லையில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த இரு நாடுகளின் அதிகாரிகளும் உறுதியேற்றுள்ளனா்’’ என்றாா்.

கல்வான் நதியில் சீனா அணை கட்டுவது தொடா்பாக வெளியான செய்தி குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கும் அவா் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.