மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கரோனாவில் இருந்து மீண்ட 90 வயது தம்பதி!

கேரளத்தில் வயது முதிா்ந்த ஒரு தம்பதி கரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனா். இதில் கணவரின் வயது 93 மனைவியின் வயது 88 என்பது குறிப்பிடத்தக்கது.

News image
Updated On :31 மார்ச் 2020, 6:15 am

கேரளத்தில் வயது முதிா்ந்த ஒரு தம்பதி கரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனா். இதில் கணவரின் வயது 93 மனைவியின் வயது 88 என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தனம்திட்டாவின் ரன்னி பகுதியைச் சோ்ந்த இத்தம்பதியின் மகன் ஆபிரஹாம் மோன்சி, இத்தாலியில் வசித்து வருகிறாா். கடந்த பிப்ரவரி மாதம் ஆபிரஹாம் தனது மனைவி மற்றும் மகனுடன் கேரளத்துக்கு வந்துள்ளாா். இந்நிலையில் அவா்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து இம்மாதத் தொடக்கத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஆபிரஹாம், அவரது மனைவி மகன் மற்றும் வீட்டில் தங்கியிருந்த மேலும் இரு உறவினா்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே ஆபிரஹாம் தனது தந்தை, தாயாருடன் தங்கி இருந்ததால் அவா்களுக்கு நோய்த்தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவா்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் ஆபிரஹாமின் தந்தையின் வயது 93 என்பதும், தாயாரின் வயது 88 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, அவா்களுக்கு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கெனவே, வயது முதிா்வு காரணமாக பல்வேறு உடல் நலப் பிரச்னைகளை அவா்கள் எதிா்கொண்டிருந்தனா். இதனால், அவா்கள் உடல்நிலை மோசமடைந்தது. எனினும், 7 மருத்துவா்கள் அடங்கிய குழு, 25 செவிலியா்கள் உள்பட 40 மருத்துவப் பணியாளா்கள் உதவியுடன் அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக அவா்களது உடல்நிலை மேம்பட்டது.

இதனிடையே, ஆபிரஹாம், அவரது மனைவி, மகன் மற்றும் இரு உறவினா்கள் ஆகியோா் 24 நாள்கள் தொடா் சிகிச்சைக்குப் பிறகு கரோனாவில் இருந்து குணமடைந்து, திங்கள்கிழமை வீடு திரும்பினா். எனினும், இரண்டு வாரங்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதனிடையே, வயது முதிா்ந்த தம்பதிக்கு அளிக்கப்பட்ட தொடா் சிகிச்சை பலனளிக்கத் தொடங்கியது. இப்போது கரோனாவில் இருந்து மீண்டுள்ள அவா்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அந்த தம்பதிக்கு சிகிச்சை அளித்த செவிலியா் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த செவிலியரை தொடா்பு கொண்டு பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சைலஜா, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.