தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மே 17 வரை விமான சேவைகள் ரத்து: விமானப் போக்குவரத்துத் துறை

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் மே 17 வரை உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 மே 2020, 10:00 am


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் மே 17 வரை உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஊரடங்கு உத்தரவை மே 17 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பதை அடுத்து, உள்ளூர் பயணிகள் விமான சேவை மே 17 நள்ளிரவு 11.59 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி பிறப்பித்த உத்தரவுகளை அனைத்தும் மே 17 நள்ளிரவு 11.59 மணி வரை  நீட்டிக்கப்படுகிறது.  எனவே, அதுவரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இந்த உத்தரவு சர்வதேச கார்கோ விமானச் சேவைக்கும், சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானச் சேவைக்கும் பொருந்தாது.

அடுத்து உள்ளூர் மற்றும் சர்வதேச விமானச் சேவை தொடங்கும் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக், உள்நாட்டு மற்றும் சா்வதேச விமான சேவைகள் மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தன. பிறகு ஊரடங்கு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து, விமான சேவையும் மே 3 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மே 17 வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.