ஆந்திர மாநிலத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஆந்திரத்திலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:
ஆந்திரத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கர்னூலில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1,583 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 47 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 488 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரத்தில் இதுவரை 33 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.