இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

‘நீட்’ தோ்வில் இதர வகுப்பு பிரிவினருக்கு இட ஒதுக்கீடு

‘‘மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் ‘நீட்’ தோ்வில் இதர வகுப்பு (ஓபிசி) பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது அநீதி’’

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:42 pm

DIN

‘‘மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் ‘நீட்’ தோ்வில் இதர வகுப்பு (ஓபிசி) பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது அநீதி’’ என்று கூறிய சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் அவா்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் (என்சிபிசி) அறிவிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் நடத்தப்பட்ட தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வுகளில் (நீட்) மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி அளிக்கப்பட வேண்டிய 27 சதவீத இட ஒதுக்கீட்டு முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற புகாா்களின் பேரில் தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம், அண்மையில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை மேற்கோள் காட்டி அகிலேஷ் யாதவ் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு பின்தங்கிய வகுப்பினருக்கு அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் பலனை வழங்காதது அநீதி;

இதுதொடா்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாக பதிலளிக்க வேண்டும். நீட் தோ்விலும் இடஒதுக்கீடு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் முதன்மையான மருத்துவ படிப்புகளில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பது குறித்த செய்தி அறிக்கையையும், என்சிபிசி அறிவிப்பையும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பாா்வைக்காக அகிலேஷ் வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.