தில்லியில் புதிதாக 4,853 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 4,853 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,64,341 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 6,356 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,30,112 பேர் குணமடைந்துள்ளனர். 27,873 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் இன்று 57,210 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 44,56,029 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.