புது தில்லி: நாட்டில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி ஒரே நாளில் 92 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அது 83 ஆயிரமாக உள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய குடும்ப நல மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாட்டில் ஒரே நாளில் 83,809 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 49,30,236 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது 9,90,061 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது 20.08 சதவீதமாகும்.
இதுவரை கரோனா பாதித்த 49 லட்சம் பேரில், 38.59 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன் மூலம் நாட்டில் கரோனாவில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 78.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனா பாதித்தவர்களில் நேற்று ஒரே நாளில் 1,054 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 80,776 ஆக உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 1.64 சதவீதமாகும்.
நாட்டில் இதுவரை 5.83 கோடி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, திங்கள்கிழமை ஒரே நாளில் 10.73 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


