தில்லியில் புதிதாக 4,473 பேருக்கு கரோனா: மேலும் 33 பேர் பலி

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 4,473 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 4,473 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 4,473 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,30,269 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 33 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,839 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை மொத்தம் 1,94,516 பேர் குணமடைந்துள்ளனர். 30,914 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தில்லியில் இன்று மட்டும் 62,593 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 23,09,578 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com