மகாராஷ்டிரத்தில் புதிதாக 23,365 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 11,21,221 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 474 பேர் பலியாகியுள்ளனர். 17,559 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 30,883 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 7,92,832 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,97,125 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி:
தாராவியில் புதிதாக 15 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,960 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,545 பேர் ஏற்கெனவே குணமடைந்ததையடுத்து, 143 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.