தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் மீண்டும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த 48 வயதான மணீஷ் சிசோடியாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால், உடனடியாக தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செப்டம்பர் 14-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று (புதன்கிழமை) முதல் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது உடல்நிலை சீராக உள்ளது.
உடல்நிலைக் குறைபாடு காரணமாக ஆக்ஸிஜன் உதவியுடன் நிலையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிறகு துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


