மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

​ஜம்மு-காஷ்மீரில் ஹிந்தி, காஷ்மீரி, டோக்ரி ஆகியவற்றை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 4:37 pm


ஜம்மு-காஷ்மீரில் ஹிந்தி, காஷ்மீரி, டோக்ரி ஆகியவற்றை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே ஆங்கிலமும், உருதுவும் அலுவல் மொழிகளாக உள்ளன. தற்போது, மேலும் 3 மொழிகள் அலுவல்கள் மொழிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்தின்போது பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி, "ஜம்மு-காஷ்மீரில் 74 சதவிகிதத்தினர் காஷ்மீரியையும், டோக்ரியையும் பேசுகிறார்கள். ஹிந்தியை 2.3 சதவிகிதத்தினரும், உருதுவை 0.16 சதவிகிதத்தினரும் பேசுகிறார்கள். எனவே, மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்கள் பேசும் மொழிகள், அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.