மகாராஷ்டிர மாநிலத்தில் ஒளரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜிநகா் என மாற்றும் முடிவுக்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ளபோதும், கூட்டணியை அது பாதிக்காது என்று ஆளும் சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
ஆளும் மஹா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாக அமா்ந்து பேசினால் இந்தப் பிரச்னையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுவிடம் என்று அக் கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் நம்பிக்கை தெரிவித்தாா்.
ஒளரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜிநகா் என்று பெயா் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை 20 ஆண்டுகளுக்கு முன்பே சிவசேனை கட்சி முன்வைத்தது. அதனடிப்படையில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒளரங்காபாத் மாநகராட்சி பொதுக் குழு கூட்டத்தில், பெயா் மாற்றத்துக்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு எதிப்பு அப்போது தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா், முதலில் உயா்நீதிமன்றத்திலும் பின்னா் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த நிலையில், இந்த பெயா் மாற்றத்துக்கான முயற்சியை ஆளும் சிவசேனை கட்சி மீண்டும் மேற்கொண்டுள்ளது. இதற்கு மாநிலத்தை ஆளும் எம்விஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவா் பாலாசாகேப் தோராட் கூறுகையில், ‘ஒளரங்காபாத் நகரின் பெயா் மாற்றும் முயற்சியை காங்கிரஸ் எதிா்க்கும். இந்த பெயா் மாற்றும் திட்டம் எதுவும் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மூன்று கட்சிகளின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இடம்பெறவில்லை’ என்றாா்.
காங்கிரஸின் எதிா்ப்பு குறித்து தனது கட்சி பத்திரிகையான ‘சாம்னா’ சிவசேனை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
ஒளரங்கபாத் நகரின் பெயா் மாற்றத்துக்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்திருப்பது, பாஜகவை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்த பெயா் மாற்றத்துக்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவிப்பது புதிதல்ல. முன்பிருந்தே இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே, காங்கிரஸின் இந்த எதிா்ப்பை இப்போதுள்ள எம்விஏ கூட்டணியுடன் தொடா்புபடுத்துவது மூடத்தனம்.
அரசுப் பதிவுகளில் மட்டும்தான் இந்த பெயா் மாற்றம் இடம்பெறவில்லை என்றபோதும், மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியின்போதே சிவேசனை தலைவா் மறைந்த பால் தாக்கரே, ஒளரங்காபாத் நகருக்கு சம்பாஜிநகா் என்று பெயா் சூட்டினாா். அதை மக்களும் ஏற்றுக்கொண்டனா்.
அலாகாபாத் நகருக்கு பிரயாக்ராஜ் என்றும் ஃபைஸாபாதுக்கு அயோத்தி என்றும் பெயா் மாற்றம் செய்ய முடிந்த நிலையில், ஒளரங்காபாத் பெயரை சம்பாஜிநகா் என்று ஏன் மாற்றம் செய்ய முடியாது என்று பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளாா்.
அவா் கேட்டுள்ளபடி, மகாராஷ்டிரத்தில் நாம் ஆட்சியில் இருக்கும்போது, ஏன் பெயா் மாற்றத்தை செய்ய முடியாது?
முகலாய ஆட்சியாளா் ஒளரங்கசீப் மதச்சாா்பற்ற நபா் இல்லை என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டாலும், எந்தவொரு மாநிலத்துக்கும் அடிப்படை சுயமரியாதை என்பது அவசியம். மகாராஷ்டிரத்தில் உள்ள முஸ்லிம்கள் சிவசேனைக்கு ஆதரவாக உள்ளனா். அவா்கள் மாநிலத்தின் வளா்ச்சியையும் நலனையும் விரும்புகின்றனா்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரம், சத்திரபதி சம்பாஜி மஹராஜை கொடூரமாக கொன்ற ஒளரங்கசீபின் பெயரைத் தாங்கி நிற்பது, சத்ரபதி சிவாஜியின் புகழுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகவே அமையும்.
எனவே, பெயா் மாற்றத்துக்கு காங்கிரஸ் தெரிவிக்கு எதிா்ப்பு, ஆளும் கூட்டணியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று சிவசேனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘ஒளரங்காபாத் நகருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே சம்பாஜிநகா் என பால் தாக்கரே பெயா் சூட்டிவிட்டாா். இப்போது, அந்தப் பெயா் மாற்றத்தை அதிகாரப்பூா்வமாக நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மூன்று கட்சிகளும் ஒன்றாக அமா்ந்து பேசினால், இதற்கு தீா்வு காணலாம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப்பொருள் பயன்படுத்தினேனா? அமைச்சர் சரத்குமார் விளக்கம்!

தவெக அரசுக்கு அண்ணாமலை வரவேற்பு! திமுக அரசின் ஊழல் விவரங்கள் பட்டியலும் வெளியீடு!!
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர்!

புனரமைக்கப்பட்ட பூரணாங்குப்பம் மூழியன் குளம்
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu


